(எம்.மனோசித்ரா)
நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதுள்ள நிலைமை என்ற தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினர் கலந்து கொண்டிருந்தனர். நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் மரணங்களின் வீதத்தினை குறைப்பதற்காகவும் , கொவிட் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் இதன் போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய 65 வயதுக்கு மேற்பட்டோரில் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள போது சிகிச்சை பெறுவதில் காணப்படுகின்ற குறைபாடுகள் காணப்பட்டால் அவர்களை துரிதமாக வைத்தியசாலைகளில் அனுமதிப்பது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 24 மணித்தியாலங்களும் இயங்கும் கொவிட் தகவல் மத்திய நிலையத்திற்கு கிடைக்கப் பெறும் தகவல்களில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமையளித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு இதன் போது தீர்மானிக்கப்பட்டது. இதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் நீர்கொழும்பு நகரசபையால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM