அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதற்கு  இனவாத சக்திகள் கடும் பிரயத்தனம்

Published By: Ponmalar

10 Sep, 2016 | 05:38 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது  அரசாங்கத்தின்  முயற்சிகளை  குழப்பியடைப்பதற்கு   இனவாத சக்திகள்  கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றன.  இனவாத சக்திகளின்செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இச்சம்மேளனத்தில் வரவேற்புரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

ஐக்கிய தேசியக் கட்சியானது சகல இன மக்களுக்காகவும் செயற்பட்டு வருகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர், பறங்கியர் என சகல இன மக்களின் நல்வாழ்வுக்காகவும் எமது கட்சி செயற்படுகின்றது.

இன, மத  பேதங்களுக்கு  அப்பால்  ஒன்றிணைந்த இலங்கையை  கட்டியெழுப்பும் வகையில்  எமது தலைவர்   ரணில் விக்கிரமசிங்க தற்போது  கட்சியின் செயற்பாடுகளை   முன்னெடுத்து வருகின்றார்.  

நாட்டில்  நல்லிணக்கத்தை  ஏற்படுத்தவும்  சிறுபான்மையின மக்களின்  பிரச்சினைகளுக்கு   உரிய தீர்வைக் காணவும்    பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  ஐக்கிய தேசியக்கட்சியின்  நல்லாட்சி அரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.  இதற்கு  சிறுபான்மையின மக்கள் உட்பட சகல இன மக்களும் ஆதரவு  தெரிவிக்கவேண்டியது   அவசியமானதாகும். 

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது  அரசாங்கத்தின்  முயற்சிகளை  குழப்பியடைப்பதற்கு   இனவாத சக்திகள்  கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றன.  இத்தகைய இனவாத சக்திகளின்செயற்பாடுகளுக்கு ஒருபோம் அடிபணியாது  நாம் எமது நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  

யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள்,  மற்றும்  யுத்தக்குற்றச்சாட்டுக்கள்,  குறித்தும்   அரசாங்கம் என்ற வகையில்  நாம்  பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.  அதற்கான  நடவடிக்கைகளும்,  துரிதகதியில்  எடுக்கப்படவேண்டும்.  இவ்வாறு  யுத்தத்தினால்  ஏற்பட்ட வடுக்கள் களையப்பட்டால் மாத்திரமே  நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02