(நெவில் அன்தனி)
'முன்னோக்கி நகர்வோம்' என்ற எண்ணக்கருவுடனான ஒட்டுமொத்த தகவலை உலகுக்கு வழங்கும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழா 'எங்களுக்கு சிறகுகள் உள்ளன' என்ற தொனிப் பொருளைக் கொண்ட தொடக்க விழா வைபவத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு ஆரம்பமானது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் 68,000 வெற்று ஆசனங்களுடன் நடைபெற்ற தொடக்க விழாவின்போது பராலிம்பிக் விளையாட்டு விழாவை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
வெள்ளை முகக்கவசத்துடன் மேடையில் பிரசன்னமான பேரரசர் நருஹிட்டோ 'டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவை நான் தொடக்கிவைக்கின்றேன்' என பிரகடனப்படுத்தினார்.
தொடக்கவிழாவின் போது ஜப்பானின் 3 மாற்றுத்திறனாயிகள் சக்கர இருக்கையில் அமர்ந்தவாறு டோக்கியோ 2020 பாரலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்தனர்.
கொரோனா தொற்று நோய் காரணமாக ஒரு வருடத்தால் பிறப்போடப்பட்டு நேற்று ஆரம்பமான பராலிம்பிக் விளையாட்டு விழாவின் 16 ஆவது அத்தியாயத்தில் அகதிகள் பராலிம்பிக் அணி உட்பட 162 அணிகளைச் சேர்ந்த 4,400 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 22 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுளளனர்.
'எங்களுக்கு சிறகுகள் உள்ளன' என்ற தொணிப் பொருளில் நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் ஒரு மினி விமான நிலையம் அமைக்கப்பட்டு ஒற்றை இறக்கையுடனான விமானம் வானை நோக்கிப் பறப்பதைப் போன்ற அற்புத காட்சியை 13 வயதுடைய மாற்றுத்திறனாளி சக்கர இருக்கையில் அமரந்தவாறு செய்துகாட்டினார்.
தன்னார்வத்தொண்டர் ஒருவர் ஆப்கானிஸ்தானின் தேசிய கொடியை ஒற்றுமையின் அடையாளமாக அணிவகுப்பின்போது அரங்குக்குள் கொண்டு சென்றார்.
இவ் விளையாட்டு விழாவில் ஆப்கானிஸ்தான் உட்பட 21 நாடுகளுக்கு பங்குபற்ற முடியாமல் போயுள்ளது.
ஆரம்ப விழாவில் 3,400 பராலிம்பியர்களுடன் அணிகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழா மாற்றத்துக்கான மேடையாக அமையக்கூடும் என தொடக்க விழாவில் பேசிய சர்வதேச பராலிம்பிக குழுவின் தலைவர் அண்ட்றூ பார்சன்ஸ் தெரிவித்தார்.
'இந்த நாள் நடக்குமா என பலர் சந்தேகித்தனர். இன்னும் பலர் இது சாத்தியமற்றது என எண்ணினர்.
ஆனால், பலரின் முயற்சியால் புவியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்ல விளையாட்டு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது' எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
13 நாட்கள் தொடரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் 22 வகையான விளையாட்டுகளில் 539 தங்கப் பதக்கங்களுக்காக 4,400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தத்தமது ஆற்றல்களை 21 அரங்குகளில் வெளிப்படுத்தவுள்ளனர்.
இவ் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 9 மாற்றுத்திறனாளிகள் பதக்கங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் பங்குற்றுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM