(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் எழுந்துள்ள அடிப்படை பிரச்சினைகளை மூடி மறைக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் பங்காளி கட்சி தலைவர்களை விமர்சித்து புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பதிவான மரணங்கள் அனைத்திற்கும் அரசாங்கம்பொறுப்பு கூற வேண்டும். சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்பட்டதால் நாடு பாரிய நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது.
இடுகம கொவிட் நிவாரண நிதியத்தின் மீது நம்பிக்கையில்லை. கொவிட் முதலாம் அலையில் இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் நிதியத்திற்கு உதவி புரிந்தார்கள். இறுதியில் அந்நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்தவில்லை.
ராஜபக்ஷர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே சுதந்திர கட்சியினர் இடுகம நிதியத்திற்கு தங்களின் மாத சம்பளத்தை வழங்காமல், சுதந்திர கட்சி மட்டத்தில் நிதியத்தை உருவாக்கியுள்ளார்கள்.
ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி ' எதிர்க்கட்சியின் மூச்சு' என்ற நிதியத்தின் ஊடாக நிதி திரட்டி வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.
சுகாதாரம், பொருளாதாரம் என பலதரப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்விடயங்களை மூடி மறைப்பதற்காக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்காளி கட்சி தலைவர்களை விமர்சித்து புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM