தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது முறையாக தடுப்பூசி போடும் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது.
ஜேர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆரம்பநிலையிலேயே வேண்டுகோளை நிராகரித்துவிட்டன.
இந்நிலையில் டெட்ரோஸ் அதானோம் நேற்று ஹங்கேரியில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
அப்போது, "இரண்டு மாதங்களாவது மூன்றாவது தடுப்பூசி போடுவதை நிறுத்திவைக்கவும் என்று கோரினார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
"தடுப்பூசி தானம் தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில் சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி போடுவதை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
மூன்றாம் கட்டம் போடும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு தானமாகக் கொடுக்கலாம்.
இதுவரை உலகளவில் உற்பத்தியாகியுள்ள 4.8 பில்லியன் தடுப்பூசியில் 75 வீதமான தடுப்பூசிகளை 10 நாடுகளே பயன்படுத்தியுள்ளன.
இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும் வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது" எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM