ஆப்கானிஸ்தானில் இருந்து இம்மாதம் 31 க்குள் அமெரிக்க படையினர் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, ஆகஸ்ட் 31 க்குள் அமெரிக்க படையினர் வெளியேறுவர் என, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
இதையடுத்து தலிபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி, ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹின் தெரிவித்துள்ளதாவது,
அனைத்து படைகளையும் ஆகஸ்ட் 31க்குள் திரும்ப பெறுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
தற்போது அவர்கள் வெளியேறுவதற்கான காலத்தை நீடிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
படைகள் வெளியேற அமெரிக்கா அல்லது பிரிட்டன் கூடுதல் அவகாசம் கோரினால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனை மீறினால் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM