பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கிய அமைச்சர்கள் - ஒரு மாத சம்பளத்தை வழங்கவுள்ளனர்

24 Aug, 2021 | 07:03 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்களின்  ஆகஸ்ட் மாத சம்பளத்தை  கொவிட்-19  நிவாரண நிதியத்திற்கு  அர்ப்பணிக்குமாறு பிரதமர் மஹிந்தராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும் அதிக நிதி செலவாகுகிறது. 

ஆகவே தற்போதைய நிலையில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டதை அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

 நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையில் உள்ளது.  அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய   சிக்கலான நிலையை வெற்றிக் கொள்ள முடியும். அனைத்து தரப்பினருக்கும் நிதி பற்றாக்குறை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும் கொவிட் தாக்கத்தில் இருந்து மீள்வது குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

 ஆகவே அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மாத சம்பளத்தை கொவிட் நிவாரண நிதியத்திற்கு செலுத்தி  நாட்டு மக்களுக்க ஒரு முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களும் தங்களின் விருப்பத்திற்கு அமைய அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

' இடுகம ' கொவிட் நிதியத்திற்கு   கடந்த காலங்களில் பெரும்பாலான தரப்பினர் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.அரச மற்றும் தனியார் நிறுவனத்தினர் நிதி மற்றும் வைத்திய உபகரணங்கள்ஊடாக உதவி புரிந்துள்ளார்கள்.

அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திக்கு வழங்க  ஒன்றிணைந்த நிலையில் இணக்கம் தெரிவிப்பதற்கு முன்னர் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

இவரது இச்செயலை பாராட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏனைய தரப்பினரும் இதனை ஒரு எடுத்துக்காட்டாக கருத வேண்டும். என்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38