(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது.
பொய்யான கருத்தை அவர் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் கொழும்பு நகரில் உள்ள இரண்டு சுகபோக இல்லத்தை ஒன்றினைத்து தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், அந்த இல்லத்தை திருப்பி கொடுப்பாரா என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று சமூக வலைத்தளங்கள் ஊடாக வினவி பதிவேற்றம் செய்துள்ளார்.
இவரது கருத்து முற்றிலும் பொய்யானதுடன் நிகாரிக்கத்தக்கது. 1986 இலக்கம் 4 என்ற ஜனாதிபதிக்கு உரித்தான சட்டத்திற்கமையவும் மற்றும் 503,2005 என்ற உயர்நீதிமன்றின் விண்ணப்பத்pற்கு அமையவும் ஓய்வுப் பெறும் ஜனாதிபதி உயிர்வாழும் வரையில் அவர் வாழ்வதற்காக உத்தியோகப்பூர்வ இல்லம் அரசினால் வழங்கப்படும். வழங்கப்படும் இல்லம் ஒருபோதும் அவருக்கு சொந்தமாகாது. அரசுக்கே சொந்தமாகும்.
ஜனாதிபதி பதவி வகித்து ஓய்வுப் பெற்ற அனைவருக்கும் அரசினால் உத்தியோகப்பூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளன.அந்த இல்லங்கள் அனைத்தும் அரசுடமையாகவே காணப்படுகிறது. அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு குறித்து சிறிதளவிலான அறிவு உள்ளவர்கள் இதனை அறிந்துக் கொள்வார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலறியும் சட்ட மூலத்திற்கு அமைய இலங்கை பிரஜைகள் எவரும் இந்த உத்தியோகப்பூர்வ இல்லம் தொடர்பில் அரச பொதுநிர்வாக அமைச்சிடமும், அல்லது ஜனாதிபதி செயலக பிரிவிடமும் விண்ணப்பித்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
1976 ஆம் ஆண்டு அணிசேரா அமைப்பிற்கான நிர்மாணிக்கப்பட்ட இரண்டு 'சமிட் பிளாட்;' காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜயதுங்கவின் ஆட்சி காலத்தில் ஒன்றினைக்கப்பட்டது. தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல கடந்த காலங்களில் அமைச்சு பதவி வகித்த போது பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உத்தியோகப்பூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே பொய்யான கருத்து அதிருப்தியளிப்பதுடன் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையற்ற கருத்தை அவர் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM