சீனன்குடாவில் தனியாருக்கு சொந்தமான படகு விசமிகளால் தீக்கிரை

Published By: Digital Desk 4

23 Aug, 2021 | 05:12 PM
image

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சீனன்குடா, சின்னம்பிள்ளைச்சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இயந்திரத்துடன் இனந்தெரியாத நபர்களினால் நேற்று  (22) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்  சம்பவம் குறித்து சீனன்குடா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட இயந்திரப் படகின் உரிமையாளர், படகில் மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரோடு தனிப்பட்ட விரோத காரணமாக குறித்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32