திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்குடா, சின்னம்பிள்ளைச்சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இயந்திரத்துடன் இனந்தெரியாத நபர்களினால் நேற்று (22) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து சீனன்குடா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட இயந்திரப் படகின் உரிமையாளர், படகில் மேற்கூரை மற்றும் சொகுசு இருக்கைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் பயணச் சேவைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவரோடு தனிப்பட்ட விரோத காரணமாக குறித்த தீ சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM