எம்.மனோசித்ரா
மாத்தறை , புளத்சிங்கள, கிரான்பாஸ் மற்றும் ஜாஎல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை பொலிஸ் பிரிவில் கெகணதுர பிரதேவத்தில் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 9 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினுடன் 37 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளத்சிங்கள பொலிஸ் பிரிவில் கொன்கஸ்தென்ன பிரதேசத்தில் புளத்சிங்கள பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸ்பிரிவில் வதுல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 480 மில்லி கிராம் ஹெரோயினுடன் 51 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாஎல பொலிஸ் பிரிவில் ஏக்கல பிரதேசத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த நபரொருவர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 3 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட 18 390 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது குறித்த மோட்டார் சைக்களில் பயணித்த 33 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM