இராஜதுரை ஹஷான்
பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்ள முடியாது.
விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே இப்பிரச்சினைக்க தீர்வு காண முடியும். ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கம் பெரும் சவாலாக உள்ளது. பாணி அருந்தவதாலும், முட்டிகளை ஆற்றில் எறியும் மூட நம்பிக்கையாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. விஞ்ஞான முறைமை ஊடாக மாத்திரமே தீர்வு பெற முடியும்.
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடு இலங்கை என்ற நிலைக்கு செல்வது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM