நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் நாட்டை முழுமையாக முடக்கியுள்ள நிலையில் மன்னார் மாவட்டமும் முடங்கியுள்ளது.
இன்றைய தினம் சனிக்கிழமை மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர ஏனைய செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றன. மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.
மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையை போன்று நடைபெற்று வருகின்றன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டத்தில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை, முசலி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கட்டையடம்பன் ம.வி பாடசாலை ஆகிய இடங்களில் பைஸர் கொரோனா தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில்,பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோரின் உதவியுடன் குறித்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM