(எம்.மனோசித்ரா)
பாணந்துறை, அங்குலானை மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வலான பிரதேசத்தில் , வலான மத்தி குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 690 கிராம் ஹெரோயினுடன் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குலானை
அங்குலானை பொலிஸ் பிரிவில் அங்குலானை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 5 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயினுடன் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொரளை
பொரளை பொலிஸ் பிரிவில் ஹல்கஹாகும்புர பிரதேசத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் 19 வயதுடைய பொரளை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM