'சார்பட்டாபரம்பரை' படத்தில் ரங்கன் வாத்தியராக நடித்து ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் மூத்த நடிகர் பசுபதி, கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோகிணி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மூத்த நடிகர் பசுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரோகினி நடிக்கிறார்.
இவர்களுடன் 'அசுரன்' படபுகழ் நடிகை அம்மு அபிராமி, மூத்த நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன்குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,' சமகால மனிதர்கள் தங்களின் நாளாந்த வாழ்வியலுக்கான போராட்டத்தின் போது தவிர்க்க இயலாத சூழலில் சுயநலத்திற்காக செய்யும் சிலதவறுகளையும், அது தொடர்பாக எழும் சிக்கல்களையும் நகைச்சுவை ததும்ப திரைக்கதையாக்கி இருக்கிறோம்' என்றார்.
இப்படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன்போது இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி பாடல்பதிவுடன் படத்தின் பணிகளை தொடங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM