சிறுவயதாக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெண் பொலிஸ் ஒருவர் 19 வருடம் கழித்து சிறையில் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் என்ற பகுதியில் பெண் பொலிஸ் ஒருவரை 8 வயதாக இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு வருடம் பாலியல் தொல்லை அளித்த ஏர்லிஸ் சாஸ்ஸன் என்ற நபரை சிறையில் அடைக்க எண்ணியுள்ளார்.
இந்நிலையில், ஏர்லிஸ் சாஸ்ஸனிடம் தனியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் ஏர்லிஸ் சாஸ்ஸன் பேசுவதை பதிவு செய்வதற்கு தனது ஆடையில் டேப் ஒன்றினை மறைத்து வைத்துக் கொண்டு சக தோழிகளுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில், அப்பெண் பொலிஸ் எதிர்பார்த்தது போலவே ஏர்லிஸ் சாஸ்ஸன் தான் சிறுவயதில் 6 முறை பாலியல் தொல்லை கொடுத்தேன் என ஒப்புக் கொள்ள அவர் பேசியதையே வாக்குமூலமாக வைத்து ஏர்லிஸ் சாஸ்ஸனை கைது செய்துள்ளார்.
பின்பு, ஏர்லிஸ் சாஸ்ஸனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தான் எண்ணியவாறே அவருக்கு ஆயுள் தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்த பெண் பொலிஸ் அதிகாரி கூறுகையில், ‘‘சட்டத்தை அமல்படுத்துவதே எனது பணி. எனவேதான் சிறுவயதில் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபரை சிறையில் அடைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM