(எம்.மனோசித்ரா)
அநுராதபுரத்தில் நாளுக்கு நாள் கொவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வருவதால் ஒரு வாரத்திற்கு அநுராதபுர நகரம் மற்றும் உப நகரத்திலுள்ள கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அநுராதபுர மாவட்ட வர்த்த சங்கத்தின் செயலாளர் பி.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அநுராதபுரத்தில் நாளுக்கு நாள் கொவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வருவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. எனினும் இந்த அபாய நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் மாவட்டத்தின் பிரதான நகரான அநுராதபுரத்திற்கும், உப நகரத்திற்கும் இப்போதும் பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலைமையைக் குறைப்பதற்க்காக இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு அநுராதபுர நகரத்தில் சகல கடைகளையும் சுயமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட வர்த்தக சங்க கூட்டத்தின் போது மாவட்ட வர்த்தக சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுர நகரம் மற்றும் உபநகரங்களிலுள்ள வர்த்தக சங்க தலைவர்களின் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் நகரத்திற்கு வருகை தருமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM