நாட்டில் நிலவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, நாட்டை முடக்குவதா? அல்லது, போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிப்பதா என்று ஆலோசித்து வரும் நிலையில், அமைச்சரவை பேச்சாளர் முக்கிய விடயமொன்றை பகிர்ந்துள்ளார்.
நாட்டை முடக்கப்போவதில்லை என்ற பிடிவாதத்தில் அரசாங்கம் இல்லை எனவும், கொவிட் தொற்று மற்றும் மரணங்கள் குறித்த தரவுகளை மாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில்,
உலக நாடுகள் கொவிட் கட்டுப்படுத்தலுக்காக மூன்று பிரதான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. அவற்றில் முதலாவது முழுமையான முடக்கம் ஆகும். சில நாடுகள் மொத்த சனத்தொகையில் 40 - 50 சதவீதம் இரு கட்டங்களாகவும் தடுப்பூசியை வழங்கியதன் பின்னர் முடக்கத்தை நீக்குகின்றன.
ஏனைய நாடுகள் குறிப்பிட்ட சனத்தொகைக்கு தடுப்பூசி வழங்குவதோடு, நாட்டில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. நாம் தற்போது மூன்றாவது முறைமையையே பின்பற்றுகின்றோம்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும் நாம் நாட்டை முடக்கப்போவதில்லை என்ற பிடிவாத்தில் அரசாங்கம் இல்லை. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு பரிந்துரைக்க வேண்டும். நாட்டில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூற முடியாது. ஜனாதிபதியும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM