மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம் 

Published By: Digital Desk 4

18 Aug, 2021 | 11:09 AM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவேளி ஆற்றில் இன்று புதன்கிழமை (18) காலை மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

மணல் அகழ்வில் ஈடுபட்ட 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று காலை 7 மணியளவில் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது அங்கு சிவில் உடையில் சென்ற  இராணுவத்தினர் துப்பாகக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08