(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் )
நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை விடுத்த போதே இதனைத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிதி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் எனக்கு கிடைத்துள்ளது. நிதி சட்டமூலத்தின் அனைத்துப் பிரிவுகளும் உயர்நீதிமன்றால் பரிசீலிக்கப்பட்டு, சட்டமூலத்தின் 4(1), 5(1), 5(2), 5(4), 5(5), 6(1), 7(1), 12(b)>> 13(1, 14 மற்றும் 20 பிரிவுகளுக்கு உயர்நீதிமன்றால் பிரேரிக்கப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாகவும், 17ஆம் பிரிவை முற்றாக நீக்குவதன் மூலம் சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு பிரிவுகளும் அரசியலமைப்புக்கு முரணானதாகது எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இச்சட்டமூலத்தில் மேற்கண்ட வாசகங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM