(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமைகளை கருத்திற்கொண்டு, நிரந்தர மற்றும் தற்காலிக சேவையில் உள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்காலத்தை 2021.12.31 ஆம் திகதி வரை நீட்டிப்புதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சின் சுற்றுநிருபத்தின் படி கீழ்வரும் பிரிவுகளில் உள்ளவர்களின் சேவைக்காலம் நீட்டிகப்படவுள்ளன.
1. 2021.08.31 திகதி முதல் 2021.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70 வயதை பூர்த்தி செய்த மற்றும் 70 வயதை பூர்த்தி செய்யவுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள்.
2. 2021.03.31 திகதியன்றுடன் சேவைக்கால நீட்டிப்பை பெறாத முதல் தடவையாக நியமனம் மற்றும் சேவைக்காலம் நிறைவுபெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரிகள்.
3. 2021.12.31 திகதிக்கு முன்பதாக முதல் தடவையாக நியமன காலப்பகுதியை உடைய மற்றும் சேவைக்கால நிறைவை அண்மித்துள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகள்.
இதன்படி மேலே குறிப்பிடப்பட்டுள்ள 1,2,3 ஆகிய பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்காலத்தை 2021.12.31 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், 2021.12.31 திகதிக்குப் பின்னர் தமது சேவைக்காலத்தை நீட்டிப்பதற்கு வழமைப்போல் அமைச்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் வேறு காரணங்களுக்காக சேவை நீட்டிப்பை பெறாத திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இந்த சுற்று நிரூபத்துக்கு உள்ளடங்க மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM