இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் கடைசியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் தோல்வியை சந்தித்திருந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4–1 என்ற அடிப்படையில் வென்றது.
அதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மெக்ஸ்வெல் ருத்ர தாண்டவமாட இலங்கை அணியின் சாதனையையும் முறியடித்து அபார வெற்றியீட்டியது ஆஸி.
இந்தப் போட்டியில் இலங்கை அணி அனைத்து விதத்திலும் சிறப்பாக செயற்பட தவறிவிட்டது என்றே சொல்லலாம். இந்தப் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சு படுமோசமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் அவுஸ்திரேலிய வீரரான மெக்ஸ்வெல்லை இலங்கை அணி கட்டுப்படுத்தியாக வேண்டும். பந்தை எந்த திசையில் பிட்ச் செய்தாலும் அடித்தாடும் தன்மை கொண்ட மெக்ஸ்வெல்லுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்து வீசப்போகிறார்கள் என்பதை இன்றைய போட்டியில் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, ஆஸி.க்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை கொடுத்த முடிவு தவறாகும் என்று விமர்சிக்கப்பட்டது.
அதேபோல் பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் ஏகத்திற்கு புல்டொஸ்களை வீசி அவுஸ்திரேலியாவுக்கு இன்னும் இலகுவாக ஓட்டங்களைப் பெற வழி அமைத்துக் கொடுத்து விட்டனர்.
இந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி சமநிலையில் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM