பதுளையின் 15 பிரதேச செயலகங்களில் கொவிட்19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி 16-08-2021 வரையில் மொத்தமாக 176 பேர் உயிரிழந்துள்ளனர். 12,922 பேர் இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியாகியுள்ளனர். 4,044 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பதுளை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் செயலக அனுமதியுடன், பதுளை மாவட்ட செயலாளர் புள்ளி விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பதுளை, பண்டாரவளை, எல்ல, ஹல்துமுள்ளை, ஹப்புத்தளை, கந்தகெட்டிய, லுணுகலை, மகியங்கனை, மீகாகியுல, பசறை, ரிதிமாலியத்த, சொரணாதொட்ட, ஊவா – பரணகம, வெலிமடை, ஹாலி-எலை ஆகிய 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தே, மேற்படி விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
லுணுகலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்டு 21பேர், இன்றையதினம் (16-08-2021) கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக லுணுகலை பிரதேச சுகாதார சேவை பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை அரசினர் மருத்துவமனையில் அம்பியுலன்ஸ் வாகன சாரதிகள் மூவர், பிரதி வைத்திய பணிப்பாளர் ஒருவர் உள்ளிட்டு நான்கு வைத்தியர்கள் ஆகிய ஏழு பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாக, பதுளை மருத்துவமனை விசேட வைத்திய நிபுணர் பாலித்த ராஜபக்ச கூறினார். இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் தத்தம் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கு 60 வீதமானவர்கள், பதுளை அரசினர் மருத்துவமனையில் கொவிட் 19 தொற்றாளர்களாக இருந்து வருகின்றதாகவும் விசேட வைத்திய நிபுனர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM