நாட்டை முடக்க வேண்டாம்..! என்பதே பெரும்பான்மையோரின் நிலைப்பாடு: அஜித் நிவாட் கப்ரால்

Published By: J.G.Stephan

16 Aug, 2021 | 04:18 PM
image

(ஆர்.யசி)
நாட்டை முடக்க வேண்டும்  என  சுகாதார தரப்பினர் கூறினாலும்,  நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் நாட்டை முடக்காது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். நாட்டை முடக்க வேண்டாம் என்பதே பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாடாக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாடு முடக்கப்பட்டாலும், முடக்கப்படாது போனாலும் மக்கள் கண்டிப்பாக  பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் உள்ளன. நாட்டை முடக்கித்தான் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஏன் எதிர்பார்க்க வேண்டும். நாட்டில் முன்னெடுக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் உள்ளன. மக்களின் செயற்பாடுகளை முடக்கினாலும் நாட்டை முடக்கினாலும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் இயங்கியாக வேண்டும். ஆகவே அதற்கு இடமளித்து மக்கள் நிலைமைகளை உணர்ந்து நடந்துகொண்டால் எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை. 

கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை குறித்து சகலருக்கும் புதிதாக கூறத் தேவையில்லை. அவ்வாறு இருக்கையில் மக்கள் ஏன் அவற்றை உணர்ந்து செயற்படக்கூடாது. சகலதையும் முடக்கிவிட்டு வீடுகளில் இருந்தால் அப்போதும் மக்கள் எம்மையே குறை கூறப்போகின்றனர். மக்களின் பாதுகாப்பு அவசியமான ஒன்றாகும். சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்,  அதேபோல் பொருளாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சவால்களை வெற்றிகொள்ள சகலரும் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.

நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் நாட்டை முடக்க வேண்டாம் என வியாபார தரப்பினர், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதி இறக்குமதி துறையினர், மத்திய தரப்பினர் கூறுகின்றனர். சுகாதார வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி நாட்டை முடக்காது செயற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அவர்களின் நிலைமைகளையும் நாம் விளங்கிக்கொள்ளள வேண்டும். வெறுமனே  சுகாதார தரப்பினர் கூறுவதற்கு அமைய நாட்டை நினைத்த நேரத்தில் முடக்கிவிட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது.  நாம் இன்று தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டை வேகமாக முன்னெடுத்து வருகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50