(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்றில் மரணிப்பவர்களில் நான்கில் மூன்று பேர் 60 வயதுக்கு மேற்பட்ட, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களாகும்.
இவ்வாறு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியை கூட இதுவரை பெறாமல் இருக்கின்றனர்.
அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என ராஜாங்க அமைச்சர் வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொவிட் காரணமாக மரணிப்பவர்களில் அதிகமானவர்கள் முதியவர்கள் என்பதனால், அதனை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கையில் மொத்த சனத்தொகை 220 இலட்சமாகும். இதில் 27அரை இலட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும். அதாவது, மொத்த சனத்தொகையில் எட்டில் ஒன்று 12.5 வீதமானவர்கள் முதியவர்களாகும்.
கொவிட் தொற்றில் உயிரிழக்கும் எண்ணிக்கையை பார்க்கும்போது அது அவர்களில் 75வீதமாகும்.
அதாவது நான்கில் மூன்று பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்களாகும். அப்படியாயின் நாட்டில் ஏற்படும் கொவிட் மரணங்களில் அதிகமானவை 60வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.
அதனால் பொலிஸார், கிராமசேவகர்களின் ஒத்துழைப்புடன், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை இனம் கண்டு, அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அவர்களில் அதிகமானவர்கள் பல்வேறு நோய்கள் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதனால் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM