2021 ஜனவரியில் பதிவுசெய்யப்பட்ட கேரள ஆயுத வழக்கில், இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களில் சோதனை நடத்தியது.
ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வளாகத்தில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனைகளை முன்னெடுத்தனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் ஏழு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது.
ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்திய தேசிய புலனாய்வு பிரிவு நடத்திய சோதனைகளின் போது மேலும் இரு குற்றாவளிகள் 2021 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல்வேறு குற்ற ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் டேப்லெட் உட்பட ஏழு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னதாக 2021 மார்ச் 18 அன்று கேரள கடற்கரையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே -47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 நேரடி ரவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு இலங்கை பிரஜைகள் மீது வழக்கு முதலில் பதிவு செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM