லெபனானின் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எரிபொருள் டேங்கர் லொறி வெடித்து சிதறியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
லெபனான் செஞ்சிலுவைச் சங்கம், அதன் குழுக்கள் வடக்கு கிராமமான டிலெயில் வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து 20 உடல்களை மீட்டதாகவும், குண்டுவெடிப்பில் காயமடைந்த அல்லது தீக்காயமடைந்த 79 பேரை மீட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதேவேளை வடக்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், வெடிவிபத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவ லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹாசன் அழைப்பு விடுத்தார்.
லெபனான் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால், கடத்தல், பதுக்கல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை விநியோகம் போன்ற நடவடிக்கைகள் அங்கு அரங்கேறி வருகின்றன.
சிரிய எல்லையிலிருந்து டிலே சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
2020 ஆகஸ்ட் 4, பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 214 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM