ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 600 அதிகமான தொழிற்சங்கங்கள் கொழும்பை நோக்கி வரவுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்தாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூளை மறுநாள் சனிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனம் கொழும்பு கெம்பல் பாக் மைதானத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு தொழிங்சங்களும் 600 அதிகமான அரச மற்றும் தனியார் தொழிற்சங்க கிளை அமைப்புகளும் அன்றைய தினம் கொழும்பிற்கு ஊர்வலமாக வரவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத மெல் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது சம்மேளனத்தில் பல்லினத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும் பல இலட்சம் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்மேளனத்தின் போது எதிர்கால கொள்கை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஷேட உரையாற்றவுள்ளதுடன் கூட்டாட்சியின் வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM