சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published By: Ponmalar

08 Sep, 2016 | 03:46 PM
image

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் இன்று (08)  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நீர்பாசன திணைக்களத்தினால் மாவடியோடை பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டுவந்த பணிகள் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் தலையீடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த மாவடியோடைப்பாலம் மழைகாலத்திற்கு முன்பாக பூர்த்திசெய்யப்படாவிட்டால் விவசாயிகள் பாரிய அழிவினை எதிர்நோக்கும் நிலையேற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பிரச்சினைகள் தொடர்பில் அவரை தெளிபடுத்தமுடியாத நிலையிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றுப்பாய்ச்சல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை முற்றாக நிறுத்துவதற்கு உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை புவிசரிதவியல் அளவியல் மற்றும் சுரங்கப்பணியகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் அவற்றினை குழப்பும் வகையில் சில மண் கொள்ளையர்கள் இவ்வாறான விவசாயிகளை தூண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக மண் அகழ்வில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபடுபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40