ஐரோப்பா கண்டத்தில் உள்ள இத்தாலியில் வழக்கத்து மாறாக கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவில் 119 டிகிரி 8 பாரனைட் (48.8 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஐரோப்பா கண்டத்தில் இதுவரை பதிவான வெப்பநிலையில் அதிகரித்த வெப்பநிலையாக இது இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இத்தாலியில் பதிவான வெப்பநிலை சிசிலியன் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் உலக வானிலை அமைப்பு (WMO) அதிகாரபூர்வமாக அதனை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் உள்ள மத்திய தரைக்கடலைச் சுற்றி தொடர்ந்து நிலவும் வெப்ப அலைகள் காரணமாக தீப் பரவல் சம்பவங்கள் பல பதிவாகியுள்ன.
இதற்கு முன்பு, 1977 இல் ஐரோப்பாவில் கிரேக்கத்தின் ஏதென்ஸில் 48.0 டிகிரி செல்சியஸ் (118 ° F) வெப்பநிலை பதிவாகியதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
இத்தாலியில் வெப்ப அலை வீசுவதால், சிவப்பு எச்சரிக்கையை அந்த நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பல பிராந்தியங்களிலும், நகரங்களிலும் இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்ப அலை காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
சிசிலி, கேலபிரையாவில் 12 மணி நேரத்தில் 300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
தொடர் வெப்ப அலைகளால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பதாகவும் இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM