நாளுக்கு நாள் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் இந்த நெருக்கடியை உணர்ந்துகொண்டு செயற்பட தவறின், பேரிழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது நோயாளி 07.11.2020 அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் யூலை 2021 வரை 1,400 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள், 10 வயதுக்குட்பட்ட 52 சிறுவர்கள், அடங்குகின்றனர். அத்தோடு மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் எவ்வித சமூக பொறுப்பும் இன்றி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது நடமாடித் திரிவதனை அவதானிக்க முடிகிறது.
பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காதுவிடின், தொற்று பரவும் வேகம் மிகவும் அதிகரிக்கும் எனத் தெரிவித்த அவர். தடுப்பூசியினை கிளிநொச்சி மக்கள் அதிக ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர்
மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் அனைத்தும் அந்தக் காலப் பகுதிக்குள் செலுது்தி முடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியினை செலுத்திக்கொண்டாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM