(இராஜதுரை ஹஷான்)
சுகாதார சேவையாளர்களுக்கு நிகழ்நிலை முறைமை ஊடாக பயிற்சி வழங்குவதற்கு தேவையான நவீன உபகரணங்களை உலக சுகாதார ஸ்தாபனமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. நாட்டின் சுகாதார சேவையினை மேம்படுத்த வழங்கியுள்ள உதவிக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
நாட்டில் சுகாதார துறையில் வைத்தியர்கள், பல் வைத்தியர்கள் ஆகியோரை தவிர வைத்திய துறையில் உள்ள சகலருக்கும் தாதியர் கல்லூரி, பயிற்சி நிறுவனம் மற்றும் மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பயிற்சி நிறுவனங்கள் ஊடாக பயிற்சி வழங்கப்படுகின்றன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக வைத்திய சேவைக்கான பயிற்சி வழங்கல் சுகாதார அமைச்சினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய சுகாதார அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கமைய பேராசிரியர்கள் மற்றும் ஏனையோருக்கு பயிற்சி வழங்கும் வகையில் நிகழ்நிலை முறைமை ஊடாக பயிற்சி வழங்குவதற்கு தேவையான தொழினுட்ப உபகரணங்களை உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM