கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்கு சொந்தமான காணி இன்று விடுவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.
2010 ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த காணி தொடர்ந்தும் படையினர் தம்வசம் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் காணி உரிமையாளர் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபக்சவின் பணிப்பின் பெயரில் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்தார்.
நிகழ்வில் 57 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் G.R.R.P ஜெயவர்த்தன, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், கிராமசேவையாளர், காணி உரிமையாளர் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM