சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கைது  

Published By: Gayathri

12 Aug, 2021 | 12:36 PM
image

மட்டக்களப்பு கல்குடா கடலில் சட்டவிரோதமாக படகு ஒன்றில் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்களை நேற்று புதன்கிழமை (11) நள்ளிரவு கைதுசெய்துள்ளதாக வாகரை கடற்படையினர் தெரிவித்தனர்.

வாகரை கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையின் கடலோர பாதுகாப்பு திணைக்கள பிரிவு அதிகாரிகளின் உதவியோடு சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் கல்குடா கடலில் வைத்து 3 பேரை கைது செய்ததுடன் படகு மற்றும் 65 கடல் அட்டை ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஏனைய கடல் தொழில் உபகரணங்கள்  என்பனவற்றை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு  மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56