மட்டக்களப்பு கல்குடா கடலில் சட்டவிரோதமாக படகு ஒன்றில் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்களை நேற்று புதன்கிழமை (11) நள்ளிரவு கைதுசெய்துள்ளதாக வாகரை கடற்படையினர் தெரிவித்தனர்.
வாகரை கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையின் கடலோர பாதுகாப்பு திணைக்கள பிரிவு அதிகாரிகளின் உதவியோடு சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் கல்குடா கடலில் வைத்து 3 பேரை கைது செய்ததுடன் படகு மற்றும் 65 கடல் அட்டை ஒக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஏனைய கடல் தொழில் உபகரணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM