(எம்.மனோசித்ரா)
உருமாறி வரும் வைரஸ்களுக்கு தடுப்பூசிகள் சவாலாக அமையாது. எதிர்வரும் காலங்களில் உருவாகக் கூடிய நிலைமாறிய வைரஸ்கள் தற்போது கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்று முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று உத்தரவாதமளிக்க முடியாது. எனவே முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வைரஸ்நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத போது டெல்டா வைரஸ் தொற்று இரு மடங்கு வேகமாகப் பரவக்கூடும். ஆரம்பத்தில் காணப்பட்ட வைரஸ் தொற்றிலிருந்து சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத போதிலும் ஓரளவு தப்பிக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் டெல்டா தொற்றிடமிருந்து அவ்வாறு தப்பிக்க முடியாது.
குறிப்பாக மூடிய அறைகளில் காற்று குளிரூட்டி (ஏ.சி.) காணப்பட்டால் வைரஸ் பரவக் கூடிய வேகம் அதிகமாகக் காணப்படும். எனவே இவ்வாறான இடங்களில் இரு முகக்கவசங்களை அணிந்து மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாகவும் தடுப்பூசியைப் பெற்று இரு வாரங்களின் பின்னரே முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். முழுமையான நோய் எதிர்ப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் தொற்றுக்கு உள்ளானாலும் மரணத்தை தவிர்க்க முடியும்.
ஆனால் இதனை ஸ்திரமாக நம்பிக் கொண்டிருக்க முடியாது. காரணம் வைரஸ்கள் காலம் செல்ல செல்ல மாற்றமடையும் போது தடுப்பூசிகள் அவற்றுக்கு சவாலாக அமையாது. உருமாறிவரும் வைரஸ்களுக்கு தடுப்பூசி சவாலாக அமையாது. எனவே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதோடு, வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும். முதலாவது கட்டமாக மாத்திரம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களை முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்களாகக் கருத முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM