படுமோசமான அரசாங்கத்தை உருவாக்கியதால் நரகத்திற்கு செல்லும் நிலை: தவறுகளை திருத்திக் கொள்ளாவிடின் ராஜபக்ஷர்கள் வெளியேற்றப்படுவர்

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)
படுமோசமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டதால்  நரகத்திற்கு செல்ல நேரிடும் என நாட்டுமக்கள் எம்மை விமர்சிக்கிறார்கள். மக்கள் வழங்கிய பெரும்பான்மை பலம் தவறாக செயற்படுத்தப்படுகிறது. அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் ராஜபக்ஷர்கள் அனைவரும் வெகுவிரைவில் அரசியலில் இருந்து மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாங்கள் சொல்வதையும், வழங்கும் ஆலோசனைகளையும் ஆட்சியாளர்கள் கவனத்திற் கொள்வதில்லை. நாடு இன்று பாரிய நெருக்கடியியை எதிர்க் கொண்டுள்ளது. இந்நிலைமை குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம். உரிய இடத்திற்கு பொருத்தமான நபர் சேவையில் அமர்த்தப்படாமை தற்போதைய நெருக்கடிகளுக்கு ஒரு காரணியாகும்.

 கொவிட்  -19 வைரஸ் தொடர்பில் முறையான கொள்கை திட்டம் செயற்படுத்தப்படவில்லை. எல்லை மீறிய அதிகாரங்கள் பலவீனமான ஆட்சியதிகாரத்தை உருவாக்கும் என்று குறிப்பிடப்படுவது இன்று உண்மையாகியுள்ளது. இந்த அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பல எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வழங்கினார்கள்.

 பலமான தலைமைத்துவத்தின் கீழ் நாடு நல்லதை நோக்கி பயணிக்கும் என கருதியே மக்கள் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள். ஆனால் இன்று மக்களின் எதிர்பார்ப்பு தகர்த்தப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரம் கூடிய பின்னர் தான்தோன்றித்தனம் ஏற்படும் என்பதை தற்போது உணர்ந்துக் கொள்கிறோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01