(ஏ.என்.ஐ)
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட குறைந்தது 45 தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.
லஷ்கர்கா நகரில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் 112 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தான் தனது பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும், ஆப்கான் அரச படைகளுக்கு எதிரான தலிபான் தாக்குதலுக்கு ஆதரவளிப்பதாகவும் பலமுறை ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதவர் குலாம் இசச்சாய் கூறுகையில்,
இந்த விமானத் தாக்குதல்கள் தலிபான்களுக்கான விநியோகச் சங்கிலியை உடைத்துள்ளதுடன் , இவற்றின் மேலதிக ஆதாரங்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தலிபான்கள் அதிகரித்துள்ளனர். மற்றும் ஆப்கானிஸ்தானில் பல முக்கிய மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM