ஆப்கானின் வடக்கு நகரைக் கைப்பற்றியதாக தலிபான்கள் கூறியதைத் குண்டூஸ் விமான நிலையத்திற்கு பின்வாங்கிய நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் அரசு வீரர்கள் தலிபானிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர் அம்ருதீன் வாலி, இன்று காலை, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், காவல்துறையினர் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் தலிபான்களிடம் தங்கள் அனைத்து உபகரணங்களுடன் சரணடைந்தனர் என்று கூறினார்.
தாலிபான் ஆயுதக் குழு இப்போது ஒரு வாரத்திற்குள் ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரங்களில் கால் பகுதிக்கு மேல் கைப்பற்றியுள்ளது.
இந்த குழு வெள்ளிக்கிழமை முதல் ஆப்கானிஸ்தானில் ஒன்பது மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளது, இதில் பைசாபாத், ஃபாரா, புல்-இ-கும்ரி, சார்-இ-புல், ஷெபர்கான், ஐபக், குண்டுஸ், தாலுகான் மற்றும் ஜரஞ்ச் ஆகியவையும் அடங்கும்.
வெளிநாட்டு படைகளின் வெளியேறல் தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தலிபான்கள் தொடர்ச்சியான தாக்குதல்களையும் நில ஆக்கிரமிப்புக்களையும் ஆப்கானில் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM