தங்க சங்கிலியை கொடுக்க மறுத்த தாயின் கழுத்தை வெட்டி கொலை செய்த மகன் கைது

Published By: Digital Desk 4

10 Aug, 2021 | 07:19 PM
image

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி  குமாரவேலியார் கிராமத்தில் தனது தாயின் கழுத்தை  கத்தியால் வெட்டிக் கொலை செய்த 44 வயது மகனை கைது செய்துள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தாய் அவரது மகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தனது வீட்டுக்கு சென்ற மகன் தாயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்த நிலையில் தாய் சங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார். 

இதனையடுத்து மகனுக்கும் தாயாருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து  அங்கிருந்த கத்தியால்  தாயாரின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தாயாரை வெட்டி கொலை செய்த 44 வயது மகனை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று சடலத்தை  பார்வையிட்டதன் பின்னர் வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39