சிவலிங்கம் சிவகுமாரன்
டயகம சிறுமி ஹிஷாலினியின்மரணம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் புதுப்புதுதகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. அதே போன்று ஒவ்வொரு நாளும் நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில்ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படல்வேண்டும் என்றும் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மலையகத்தையும் தாண்டிவடக்கு கிழக்கு பகுதிகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மக்களால் நடத்தப்பட்டுவருகின்றன.
அதே வேளை தொலைக்காட்சிமற்றும் சமூக ஊடகங்களில் இந்த சிறுமியின் மரணம் குறித்த கருத்துப் பதிவுகள்பல்வேறுபட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் இவரது மரணத்தில் நிலவும்மர்மங்கள் குறித்து தான் பலரும் தமது கற்பனைகளையும் கதைகளையும் பகிர்ந்து வருகின்றார்களே தவிர எதிர்காலத்தில் இவ்வாறானசம்பவங்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த ஆரோக்கியமான கலந்துரையாடல்களோ அல்லதுஅது குறித்து அரசாங்கத்துக்கு எவ்வாறு அழுத்தங்களை வழங்கலாம் என்பது குறித்தபகிர்வுகளையோ காணக்கிடைப்பது குறைவாகவே உள்ளது.
மலையக அரசியல்வாதிகள் கூடஏதோ நாம் இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு சில ஆர்ப்பாட்டங்களைமுன்னெடுத்தும் சில அறிக்கைகளை விடுத்தும் தற்போது அமைதியாகி விட்டனர்.
ஒரு சிலர் தோட்டத்தொழிலாளர்களுக்குவருமானம் குறைந்த காரணத்தினாலேயே இவ்வாறு நடக்கின்றது என்ற தமது திடீர் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதைஉறுதிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் காரணங்களைக் கூறி வந்தனர்.
ஆனால் மறுபக்கம்பிரதிநிதிகள் தமது மக்களின் ஏழ்மை நிலையை கண்டு கொள்ளாமலிருந்த காரணத்தினாலேயேபெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு தொழிலுக்கு அனுப்புகின்றனர் என அவர்களுக்குபதிலடி கொடுக்குமுகமாக, பலரும் தமது பதிவுகளை சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-31
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM