(எம்.மனோசித்ரா)
மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஐவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க்பபட்டு, அவர்கள் ஐவரும் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 25 000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் ஜீ.காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மாமாங்கேஸ்வர ஆலய தீர்தோற்சவத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைப்பட்ட நிலையில் , இது தொடர்பில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஜீ.காசிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
ஆலயத்தின் பிரதான பூசகர் உள்ளிட்ட ஆலய நிர்வாகத்தினர் நேற்று திங்கட்கிழமை முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பொலிஸார் இனங்கண்டுள்ளதோடு , அவர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அனைவருக்கும் சமமாகும்.
ஏனெனில் இது அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த விதிகளை மீற வேண்டாம் என்று நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM