தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த வாரம் தொடங்கும் வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இன்னும் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியாவின் சக்திவாய்ந்த அதிகாரியும், ஜனாதிபதி கிம் யொங் உன்னின் சகோதரியுமான கிம் யோ யொங் தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவும், அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை ஆரம்ப இராணுவ பயிற்சிகளைத் தொடங்கும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்தது.
இந் நிலையில் இந்த பயிற்சிகள் வட கொரிய மக்களை அச்சுறுத்தும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் "விரும்பத்தகாத, சுய அழிவு நடவடிக்கை" என்று கிம் யோ யொங் கொரிய மத்திய செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆபத்தான போர் பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான எங்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை புறக்கணிப்பதன் மூலம் மிகவும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM