(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மற்றும் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் ஆகிய இரண்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது எனது கனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரரான லசித் மாலிங்கவுடனான நேர்காணலொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் வனிந்து ஹசரங்க கூறுகையில்,
"அண்மையில் நிறைவடைந்த இந்திய கிரிக்கெட் அணியுடனான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிந்தது. இதனால், ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் இரண்டிலிருந்து எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
எனினும், உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லை. இது தொடர்பில் அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனக்கு இப்போது 24 வயதுதான் ஆகிறது. ஐ.பி.எல் போன்ற கிரிக்கெட் தொடரில் விளையாடுவதால் மிகச் சிறந்த அனுபவத்தை பெறலாம். மிகச் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சிறந்ததாகும் " என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM