கொவிட் தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் கட்சி நிதியில் ஸ்தாபிக்கப்பட்டதே..!

Published By: J.G.Stephan

09 Aug, 2021 | 05:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பொய்யான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட் தாக்கத்தை எதிர்க்கொண்டுள்ள நிலையில் அரசாங்கத்தையும், சுகாதார துறையினையும் பலவீனப்படுத்தும் வகையில் ஒரு சிலர் செயற்படுகிறார்கள். கொவிட் -19  தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் பொதுஜன பெரமுன கட்சி நிதியத்தின் செலவில் நிர்மாணிக்கப்பட்டதே தவிர அரச நிதி செலவிடப்படவில்லை. அரச நிதி செலவிடப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

 அவர்  மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கம் பெரும் சவாலை தோற்றுவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தையும், சுகாதார துறையினையும் பலவீனப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கொவிட்-19 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி நிதியத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்டது. கட்சி உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலதரப்பட்ட தரப்பினர் கடந்த நான்கு வருட காலமாக கட்சிக்கு வழங்கிய நிதியத்தில் இருந்து கொவிட்-19 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டன.

 இதனடிப்படையில் கட்சியின் நிதியத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்ட 20 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் கடந்த மே மாதம் நிர்மாணிக்கப்பட்டு சுகாதார தரப்பினரது செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டன என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13