(இராஜதுரை ஹஷான்)
பொய்யான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட் தாக்கத்தை எதிர்க்கொண்டுள்ள நிலையில் அரசாங்கத்தையும், சுகாதார துறையினையும் பலவீனப்படுத்தும் வகையில் ஒரு சிலர் செயற்படுகிறார்கள். கொவிட் -19 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் பொதுஜன பெரமுன கட்சி நிதியத்தின் செலவில் நிர்மாணிக்கப்பட்டதே தவிர அரச நிதி செலவிடப்படவில்லை. அரச நிதி செலவிடப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் தாக்கம் பெரும் சவாலை தோற்றுவித்துள்ளது. இவ்வாறான நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தையும், சுகாதார துறையினையும் பலவீனப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கொவிட்-19 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி நிதியத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்டது. கட்சி உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலதரப்பட்ட தரப்பினர் கடந்த நான்கு வருட காலமாக கட்சிக்கு வழங்கிய நிதியத்தில் இருந்து கொவிட்-19 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டன.
இதனடிப்படையில் கட்சியின் நிதியத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்ட 20 தற்காலிக சிகிச்சை மத்திய நிலையங்கள் கடந்த மே மாதம் நிர்மாணிக்கப்பட்டு சுகாதார தரப்பினரது செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM