சி.அ.யோதிலிங்கம்
முன்னால் அமைச்சர் ரிஷாத்பதியுதீன்வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி ஹிஷாலினி எரிகாயங்களுக்குட்பட்டு மரணமடைந்தவிவகாரம் தற்போது அனைத்து மட்டத்திலும் பேசுபொருளாகியிருக்கிறது.
பத்தோடு பதினொன்றாகஇவ்விவகாரம் முடிவடையாமல் இச்சிறுமிபோல வேறு சிறுமிகள் பாதிக்கப்படாமல் திட்டங்களைவகுத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும். உண்மையில் ஹிஷாலினி ஒரு குறியீடு மட்டும்தான். இவரைப்போல துன்பப்படும் சிறுமிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.
18 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கானசிறுமிகள் மலையகப் பிதேசத்திலிருந்து இலங்கையின் பல பகுதிகளுக்கும் வேலைக்குச் செல்லுகின்றநிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும்நூற்றுக்கணக்கான மலையகத்தைச் சேர்ந்த சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலைமையை உடனடியாக மாற்றியமைப்பது அவசியமானதாகும். வேலைக்குச் சென்ற சிறுமிகள் மட்டுமல்லாதுமலையகத்தில் வாழ்கின்ற ஏனைய சிறுவர்கள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புசிறுவர் உரிமைகள் பற்றி அக்கறைப்படுகின்ற அனைவருக்கும் உண்டு.
ஹிஷாலினி விவகாரத்தில் ரிஷாத்பதியுதீன்குடும்பம் மட்டும் குற்றவாளிகளல்ல வேறும் பல குற்றவாளிகள் உள்ளனர். இதில் முதலாவதுஹிஷாலினியின் பெற்றோர் ஆவர். என்ன தான் வீட்டில் வறுமை இருந்தாலும் 16 வயதுக்குட்பட்டசிறுமியை 18 வயதென பொய் கூறி பெற்றோர் வேலைக்கு அனுப்பியிருக்கக் கூடாது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-24
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM