(ஆ.பிரபு ராவ் ; இராமேஸ்வரம்)
ராமநாதபுரம் அருகே கடற்கரைப்பகுதியில் அரியவகை கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
ராமநாதபுரம் அருகே கீழக்கரை பாரதிநகர் கடற்கரைப்பகுதியில் அரியவகையான 100 வயதுடைய பெருந்தலை ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கிய ஆமை சுமார் 250 கிலோ எடை கொண்டதும் 150 சென்ரி மீற்றர் நீளமும் 200 சென்ரி மீற்றர் சுற்றளவும் கொண்டது.
இதனையடைத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து வனத்துறையினர் கால நடை மருத்துவர் மூலம் உடல்கூறு சோதனை செய்து அப்பகுதியிலுள்ள மணல் பகுதியில் குறித்த ஆமையினை புதைத்தனர்.
இது குறித்த வனத்துறை அதிகாரி கூறும் போது கரை ஒதுங்கிய ஆமை சுமார் 300 அண்டுகள் வாழக்கூடியது. மேலும் ஆழ்கடலை மையப்படுத்தி வாழக்கூடியது கரை ஒதுங்கியுள்ள ஆமை 100 வயதுடையது எனவும் பெரியரக படகுகள் மற்றும் பாறைகளில் அடிப்பட்டு காயம் அடைந்து இறந்திருக்கலாம் என்றார்.
மேலும் அப்பகுதி மீனவர்கள் கூறும் போது இவ்வகையான ஆமை இந்தப்பகுதியிலில் கரை ஒதுங்கியது இதுவே முதல் முறையாகும் மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரிணங்கள் அதிக அளவில் உள்ளது ஆகவே இப்பகுதிகளில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரிணங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM