யாழ். பண்ணை கடலில் தவறி விழுந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 2

09 Aug, 2021 | 10:03 AM
image

யாழ்ப்பாணம், பண்ணை கடலில் தவறி  விழுந்து காணாமல்போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் எனும் 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பண்ணை பாலத்தடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்த வேளையே குறித்த இளைஞர்  இவ்வாறு  தவறி விழுந்துள்ளார். 

தவறி விழுந்தவரை பாலத்தின் கீழுள்ள  நீரோட்டம் அடித்து சென்றிருந்த நிலையில் நேற்றைய தினம் சுமார்  2 மணி நேரங்களுக்கு மேலாக கடற்படையினர்  தேடுதல் நடாத்தி இருந்தனர். 

இந்நிலையில் பண்ணை பகுதியிலிருந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38