புகையிரத போக்குவரத்து சேவையை முழுமையாக முடக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்: தம்மிக ஜயசுந்தர

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 05:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)
பொது போக்குவரத்து சேவை தற்போது பாதுகாப்பற்ற தன்மையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பயணிகள் சமூக இடைவெளியை பேணி பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் இயலுமான அளவு புகையிரதங்களை சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

எனினும் புகையிரத சேவையாளர்கள் பலர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் , இந்நிலைமை தொடர்ந்தால் புகையிரத போக்குவரத்து சேவையினை முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும்  தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை குறிப்பாக புகையிரத போக்குவரத்து சேவை அவதானமிக்கதாக காணப்படுகிறது. புகையிரத போக்குவரத்து சேவை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த காலங்களை விட தற்போது அதி தீவிரமாக பரவலடைந்துள்ளது. இதனால் மருத்துவ துறைக்கும் பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் பல நெருக்கடிகளை  எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறான நிலையில் பொது போக்குவரத்து சேவை தற்போது நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுகிறது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்கிறோம்.

பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவையினை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். தினசரி காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையினை இலட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவது தற்போதைய நிலையில் அவதானமிக்கது என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:24:43
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04