கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் உலக நாடுகள் இயற்கையின் மற்றுமொரு சவாலான கொரோனா நோய்த்தாக்கத்திற்குள்ளாகி வருகின்றது. அத்துடன் பல்வேறு பொருளாதார இன்னல்களையும் சந்திக்கின்றது. அந்தவகையில் அச்சவால்களுக்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டெழுவதற்கு போராடிவரும் நாடுகளின் பட்டியலில் இலங்iயும் ஒரு நாடாகும். இக்காலக்கட்டத்தில் நாட்டிலுள்ள சகல துறைகளும் சற்று பின்னடைவில் காணப்படுகின்றதுடன் அவை நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கம் செலுத்துகின்றன. இவ்வாறான நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு சற்று காலதாமதமாகும். இவற்றில் வீடமைப்பு அல்லது தொடர்மாடி மனைகளின் கட்டுமானப்பணிகளும் விதிவிலக்கல்ல.
பொருளாதார வீக்கத்தால் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டமையினால் குறித்த கட்டுமானப்பணிகளை மேற்கொள்வது சற்று சிரமங்களை அளித்தாலும் இதுபோன்ற நிலைமைகளில் வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதியளித்தவாறே குறித்த தினத்தில் தமது தொடர்மாடிமனைகளை பூர்த்தி செய்வதில் முன்னோடியாகத் திகழ்கின்றது SpanEngineering (Pvt) Ltd. இளம் முயற்சியாளர், பொறியியலாளர் திரு.சி.சஞ்ஜீவன் அவர்களின் தலைமைத்துவத்தாலும் முயற்சியினாலும் கடந்த 18 வருட காலமாக சிறந்த, நேர்த்தியான நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு தொடர்மாடிமனைகளை அமைத்து வருகின்றது SpanEngineering (Pvt) Ltd. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அசைக்கமுடியாத நம்பிக்கைக்குரிய வர்த்க நாமமாக Span Tower திகழ்கின்றது.
இலங்கையில் முக்கியமாக தலைநகரில் அதிகரித்து வரும் சனத்தொகையின் காரணத்தால் இருப்பிடம் என்பது மக்களிடையே முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. தமக்கான ஒரு இல்லத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் அமைதியான சுற்றுப்புறத்தில் நவீன பாணியில் அமைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரினதும் கனவாகும். இருப்பினும் அதற்கான நேரத்தையும் பணத்தையும் செலவிட எல்லோராலும் முடிவதில்லை. ஒரு சிலர் வேலைப்பளுவின் காரணத்தால் தமது கனவு இல்லங்களை கனவாகவே கலைய விடுகின்றனர். இதுபோன்ற பலமாதிரியான பிரச்சினைகளுக்கு தீர்வாகவே SpanEngineering (Pvt) Ltd நிறுவனம் தலைநகரில் பல்வேறு தொடர்மாடிமனை செயற்றிட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந் நிறுவனம் Span Tower 24 தொடர்மாடி மனையை வெற்றிகரமாக நிறைவு செய்து அதன் திறப்பு விழாவையும் அதனை வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வினையும் கடந்த 30.07.2021ஆம் திகதி இல.48/3A, தர்மராம வீதி, வெள்ளவத்தையில் நடாத்தியுள்ளது.
Span Engineering (Pvt) Ltd இனால் நிர்மாணிக்கப்பட்ட Span Tower 24 தொடர்மாடிமனைத் தொகுதியானது 10 மாடிகளையும் 02, 03 மற்றும் 04 படுக்கையறைகளுடனான 32 மனைகளையும் கொண்டமைந்துள்ளதோடு நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல்வேறு வசதிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. மேலும் தமது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக இச் செயற்த்திட்டத்தையும் தற்காலத்தில் நிலவும் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குறித்த கால அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்து வாடிக்கையாளர்களிடம் கையளித்துள்ளமை இந் நிறுவனத்தின் பெருமையை மேலும் பறைசாற்றுகின்றது.
Span Engineering (Pvt) Ltd நிறுவனத்தைப் பெறுத்தவரையில் முக்கியமாக தொடர்மாடிமனைகளுக்கான உரிமப் பத்திரங்களையும் (Deeds) எவ்வித சிக்கல்களின்றி உரிய நேரத்தில் வீட்டுரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கின்றது. இங்கு பெற்றுக்கொள்ளும் மனைகளுக்கு நிறுவனத்தின் உதவியுடன் வங்கிக்கடன் வசதிகளையும் ஏற்பாடு செய்துதரப்படும். வாடிக்கையாளர்களுக்கு மனைகளை கையளித்த பின்னர் இந் நிறுவனத்தால் சிறந்த முறையில் பராமரிப்புச் சேவைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு வாடிக்கையாளர்களது நலன்கருதி பல்வேறு சேவைகள் Span குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையினாலேயே மக்கள் எமது தனித்துவம் கண்டறிந்து எம்மை நாடி வருகின்றனர். மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையினாலேயே எம்மால் வெற்றிகரமாக எமது அனைத்து தொடர்மாடிமனை செயற்றிட்டங்களையும் இவ்வாறான போட்டிகரமான மற்றும் சவால்கள் நிறைந்த காலப்பகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ள முடிந்தது என Span குழுமத்தின் தலைவர் திரு.சி.சஞ்ஜீவன் அவர்கள் குறிப்பிடுவதுடன் இவ்வேளையில் அவ்வாறு உறுதுணையாக இருந்த தமது பெரு மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள், சேவை வழங்குனர், ஊழியர்கள் என அனைவருக்கும் தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
மேலும் Span Tower தலைநகர் உள்ளடங்கலாக பிற பிரதேசங்களில் 285 மனைகளைக் கொண்ட 05 தொடர்மாடிமனைகளை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்பொழுது மொறட்டுவை, வெள்ளவத்தை, ராஜகிரிய, நுவரெலியா ஆகிய இடங்களில் தமது செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றது, அவற்றிற்கான விபரங்களை தெரிந்து கொள்ள அல்லது முற்பதிவுகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் , 0777415662, 0777415665, 0777415656 பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கூடாக அழைப்பினை மேற்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM