தாயொருவர் தனது ஒன்பது மாத குழந்தையை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த போது கண்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து நாடு திரும்பிய தாயே தனது குழந்தையை 2000 ரூபா பணத்திற்கு விற்பனைசெய்ய முயற்சித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த குழந்தையை விற்பனை செய்வதற்காக காத்திருந்தபோது 49 வயதுடைய சந்தேகநபரான குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி கட்டுகாஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இப் பெண் வெளிநாடு சென்று சில தினங்களுக்கு முன் குறித்த குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார்.
அவரது கணவனுக்கும் சந்தேக நபருக்குமிடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக குழந்தையை விற்பனை செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாய் இன்று கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM