அரச உத்தியோகத்தர்களை மீள சேவைக்கு அழைத்தமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: Digital Desk 3

05 Aug, 2021 | 04:37 PM
image

(எம்.மனோசித்ரா)

சகல அரச உத்தியோகத்தர்களையும் சேவைக்கு அழைத்துள்ளமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார், சிறு குழந்தைகளை உடைய தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு உரிய தரப்பினருக்கு பரிந்துரைக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் பொது செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவிக்கையில் ,

02/2021 (3) என்ற சுற்று நிரூபத்தின் ஊடாக சகல அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களில் கர்ப்பிணி தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் சிறு குழந்தைகளை உடைய தாய்மாரும் உள்ளனர். இவர்களையும் சேவைக்கு அழைத்துள்ளமை பாதுகாப்பற்றது.

அத்தோடு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். அவ்வாறானவர்களுக்கு இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது கொவிட் அபாய நிலைமை அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கமும் பொது நிர்வாக அமைச்சும் எவ்வித பொறுப்பும் இன்றி இது போன்ற சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு கர்ப்பிணி தாய்மார் , பாலூட்டும் தாய்மார், சிறு குழந்தைகளை உடைய தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு உரிய சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

இது தொடர்பான பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இங்கு முறைப்பாடளித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33